தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாம்பியன்ஸ் டிராபியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ள ரோஹித், கோலி: கௌதம் கம்பீர்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ளதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

News image

கௌதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா (கோப்புப் படம்)

படம் | பிசிசிஐ (எக்ஸ்)

Updated On :1 பிப்ரவரி 2025, 4:02 pm

DIN

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக மிக முக்கிய பங்களிப்பை வழங்கவுள்ளதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

விராட் கோலி, கௌதம் கம்பீர் (கோப்புப் படம்)

விராட் கோலி, கௌதம் கம்பீர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணியின் மதிப்பினை அதிகரிப்பவர்களாக உள்ளனர். அவர்களால் இந்திய கிரிக்கெட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது. எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ளனர். நான் ஏற்கனவே கூறியது போல, இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற வேட்கை அவர்களுக்கு இருக்கிறது என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி தனது முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.