11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பாகிஸ்தான் பெயர் அச்சிட்ட ஜெர்ஸியில் இந்திய வீரர்கள்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்ஸி வெளியானது

News image

இந்திய வீரர்கள்...

Updated On :18 பிப்ரவரி 2025, 2:59 pm IST

பாகிஸ்தான் பெயர் அச்சிட்ட சாம்பியன்ஸ் டிராபிக்கான ஜெர்ஸிக்களை அணிந்திருக்கும் இந்திய வீரர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளவிருக்கிறது.

இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடாது என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் திடல்களில் இந்தியாவின் தேசியக் கொடி புறக்கணிக்கப்பட்டது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பெயருடன் சாம்பியன்ஸ் டிராபி இலச்சினை அச்சிட்ட ஜெர்ஸிக்களை அணிந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டியா ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஐசிசி சிறந்த வீரர்களுக்கான தொப்பி வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் இந்த ஜெர்ஸியை அணிந்திருந்தனர்.

முதலில் பாகிஸ்தான் லோகோவை போட இந்திய அணி மறுத்திருந்த நிலையில், பிசிசிஐ தலைவர் சைக்கியா, ஐசிசியின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போம் எனத் தெரிவித்திருந்தார்.

அனைவரும் எதிர்பார்த்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதியும், இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து போட்டி மார்ச் 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

சமீப காலங்களில் பாகிஸ்தான் பெயரை இந்திய அணியினரின் ஜெர்ஸியில் போட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணி போட்டியை நடத்திய பாகிஸ்தானின் பெயரைப் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.