ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

கவுன்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடும் ஷர்துல்!

கவுன்டி சாம்பியன்ஷிப்பில் ஷர்துல் விளையாடுவது பற்றி...

News image

ஷர்துல் தாகூர் - ANI

Updated On :19 பிப்ரவரி 2025, 1:08 pm IST

இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப்பில் எசெக்ஸ் அணிக்காக விளையாட இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 95 போட்டிகளில் விளையாடியுள்ள ஷர்துல் தாகூரை, இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தில் எந்த அணியும் அடிப்படை தொகைக்குகூட எடுக்க முன்வரவில்லை.

ஆல் ரவுண்டரான ஷர்துல், இந்திய அணிக்காக 44 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாகூர், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்கு எசெக்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

வருகின்ற ஜூன் மாதம் இங்கிலாந்து பயணிக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், கவுன்டியில் தனது திறமையை நிரூபித்து, மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.