பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் அதிக ரிஸ்க் எடுத்திருக்க்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

News image

பாபர் அசாம் - படம் | AP

Updated On :22 பிப்ரவரி 2025, 3:55 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் அதிக ரிஸ்க் எடுத்திருக்க்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லாட்டிஃப் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் சல்மான் அஹா மற்றும் குஷ்தில் ஷா அதிரடியாக 42 ரன்கள் மற்றும் 69 ரன்கள் முறையே எடுத்தனர். இருப்பினும், பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது.

பாபர் அசாம் 90 பந்துகளில் 64 ரன்கள் எடுத்ததே தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்தனர். ஆட்டத்தின் சூழலை உணர்ந்து அவர் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

அதிக ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும்

முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவிய நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் அதிக ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லாட்டிஃப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவையே. பந்து விளையாடுவதற்கு ஏற்றாற்போல், பேட்டுக்கு சரியாக வரவில்லையென்றால், உங்களிடம் பிளான் பி இருந்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக ரன்கள் எடுக்காமல் பந்துகளை வீணடிக்கும்போது, அது அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பாபர் அசாம் அதிக ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும். ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் அதிக ரிஸ்க் எடுக்கலாம் என நான் நம்புகிறேன் என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை (பிப்ரவரி 23) நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.