நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் அதிக ரிஸ்க் எடுத்திருக்க்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லாட்டிஃப் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் சல்மான் அஹா மற்றும் குஷ்தில் ஷா அதிரடியாக 42 ரன்கள் மற்றும் 69 ரன்கள் முறையே எடுத்தனர். இருப்பினும், பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது.
இதையும் படிக்க: 10 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிடும் ஷமி..!
பாபர் அசாம் 90 பந்துகளில் 64 ரன்கள் எடுத்ததே தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்தனர். ஆட்டத்தின் சூழலை உணர்ந்து அவர் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
அதிக ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும்
முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவிய நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் அதிக ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லாட்டிஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவையே. பந்து விளையாடுவதற்கு ஏற்றாற்போல், பேட்டுக்கு சரியாக வரவில்லையென்றால், உங்களிடம் பிளான் பி இருந்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக ரன்கள் எடுக்காமல் பந்துகளை வீணடிக்கும்போது, அது அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பாபர் அசாம் அதிக ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும். ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் அதிக ரிஸ்க் எடுக்கலாம் என நான் நம்புகிறேன் என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை (பிப்ரவரி 23) நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?

பாபர் அசாம் 2ஆவது சதம்: 5ஆவது முறையாக பிஎஸ்எல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெஷாவர்!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த பாபர் அசாம்..! கெயில், விராட் கோலி சாதனை முறியடிப்பு!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


