25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்; பஞ்சாப் கிங்ஸுக்கு நன்றி தெரிவித்த ஷஷாங் சிங்!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் ஒருவராக ஷஷாங் சிங் இடம்பிடித்துள்ளார்.

ஷஷாங் சிங் - படம் | ஐபிஎல்

Published On :28 பிப்ரவரி 2025, 5:37 pm IST

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் ஒருவராக பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங் சிங் இடம்பிடித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஷஷாங் சிங் மிகவும் சிறப்பாக விளையாடினார். பல போட்டிகளில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். அவர் இந்த சீசனில் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

அதிகம் தேடப்பட்ட வீரர்

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான ஷஷாங் சிங் 9-வது இடம் பிடித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஷஷாங் சிங் பேசியதாவது: உலகம் முழுவதும் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியிருப்பது எனக்குத் தெரியாது. உண்மையில், எனது பெயர் அதில் இடம்பெற்றுள்ளது மிகப் பெரிய விஷயம். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் எனது பெயரை கூகுளில் தேடியிருப்பது நல்ல உணர்வைத் தருகிறது. இதெல்லாம் நடக்க காரணம் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம். அதிக அளவிலான கிரிக்கெட் வீரர்கள் இருந்தபோதிலும், என்மீது நம்பிக்கை வைத்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் எனக்கு ஆதரவளித்தது. அவர்களது ஆதரவு மற்றும் எனது கடின உழைப்பினால் இது சாத்தியமானது என்றார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் வருகிற மார்ச் 25 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.