திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்; பஞ்சாப் கிங்ஸுக்கு நன்றி தெரிவித்த ஷஷாங் சிங்!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் ஒருவராக ஷஷாங் சிங் இடம்பிடித்துள்ளார்.

News image

ஷஷாங் சிங் - படம் | ஐபிஎல்

Updated On :28 பிப்ரவரி 2025, 5:37 pm IST

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் ஒருவராக பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங் சிங் இடம்பிடித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஷஷாங் சிங் மிகவும் சிறப்பாக விளையாடினார். பல போட்டிகளில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். அவர் இந்த சீசனில் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

அதிகம் தேடப்பட்ட வீரர்

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான ஷஷாங் சிங் 9-வது இடம் பிடித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஷஷாங் சிங் பேசியதாவது: உலகம் முழுவதும் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியிருப்பது எனக்குத் தெரியாது. உண்மையில், எனது பெயர் அதில் இடம்பெற்றுள்ளது மிகப் பெரிய விஷயம். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் எனது பெயரை கூகுளில் தேடியிருப்பது நல்ல உணர்வைத் தருகிறது. இதெல்லாம் நடக்க காரணம் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம். அதிக அளவிலான கிரிக்கெட் வீரர்கள் இருந்தபோதிலும், என்மீது நம்பிக்கை வைத்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் எனக்கு ஆதரவளித்தது. அவர்களது ஆதரவு மற்றும் எனது கடின உழைப்பினால் இது சாத்தியமானது என்றார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் வருகிற மார்ச் 25 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.