சிட்னி டெஸ்ட்டில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடிய கவாஜா! ஏன்?

சிட்னி டெஸ்ட்டில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினார் ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா.
ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் உஸ்மான் கவாஜா
ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் உஸ்மான் கவாஜா
Published on
Updated on
2 min read

சிட்னி டெஸ்ட்டில் ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா கறுப்பு பட்டை அணிந்து விளையாடியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்- கவாஸ்கர் தொடரின் 5-வது மற்றும் கடைசிப் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 40 ரன்கள் விளாசினார்.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி விக்கெட்டாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 2 ரன்களில் ஜஸ்பிரித் பும்ராவிடம் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். பார்டர்- கவாஸ்கர் தொடரில் இதுவரை 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள உஸ்மான் கவாஜா 143 ரன்கள் எடுத்துள்ளார்.

இதையும் படிக்க |இதுமாதிரி அடி வாங்கியதில்லை..! ரிஷப் பந்த் பேட்டி!

போட்டியின் போது உஸ்மான் கவாஜா மட்டும் மற்ற ஆஸ்திரேலிய வீரர்களைத் தவிர்த்து தனது இடது கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினார். ஒருவரின் இறப்பு அல்லது துக்க நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

கறுப்புப் பட்டை அணிந்தது குறித்து உஸ்மான் கவாஜா விளக்கமளித்துள்ளார்.

அதில், கவாஜாவும், தென்னாப்பிரிக்க வீரரும், கவாஜாவின் நண்பருமான ஆஸ்வெல் பிரின்ஸும் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் லாங்ஷைர் அணிக்காக 2014 ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வருகின்றனர். அப்போது இருவரும் நட்பாக பழகிவந்தனர். அவரின் மனைவி மெலிசாவும் கவாஜாவுடன் நட்பாக பழகிவந்துள்ளார்.

இதையும் படிக்க |பும்ரா - கான்ஸ்டாஸ் மோதல்..! இந்திய வீரர்கள் ஆக்ரோஷமான கொண்டாட்டம்!

பிரின்ஸின் மனைவி மெலிசா பிரின்ஸ்(40) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு நடந்தப் போட்டியில் “அனைத்து உயிர்களும் சமம்” என தனது காலணியில் பதிவிட்டு, கையில் கறுப்பு பட்டையுடன் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் கவாஜா.

சிட்னியில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியும் பிங்க் டெஸ்ட்டாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த டெஸ்ட் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டி அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பிஜிடி தொடரில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com