மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம்: ஆஸி. முன்னாள் கேப்டன்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

News image
ரோஹித் சர்மா- படம் | AP
Updated On :3 ஜனவரி 2025, 12:39 pm

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் இன்று (ஜனவரி 3) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 40 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 9 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விலகியதையடுத்து, அவருக்குப் பதிலாக அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டார்.

மீண்டும் விளையாடுவது கடினம்

சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாத நிலையில், ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடமாட்டார் என்பது அனைவரும் எதிர்பார்த்ததே. கடந்த இரண்டு நாள்களாக நடந்த விஷயங்களிலிருந்து அவர் சிட்னி போட்டியில் விளையாடப் போவதில்லை எனத் தெரிந்தது. அவருக்குப் பதிலாக ஷுப்மன் கில் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்பதும், அணியை பும்ரா கேப்டனாக வழிநடத்துவார் என்பதும் எதிர்பார்த்தவையே.

ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இன்னும் அதிக மாதங்கள் இருக்கின்றன. ஜூன் மாதத்துக்கு முன்பாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என நினைக்கிறேன். ரோஹித் சர்மா அவரது கிரிக்கெட் பயணத்தின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறார். அவர் மிகவும் சிறந்த வீரர். அவர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.