தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மருத்துவமனைக்குச் சென்ற பும்ரா..! அணியை வழிநடத்தும் விராட் கோலி!

கடைசி டெஸ்ட்டில் பும்ரா மருத்துவமனைக்குச் சென்றதால் இந்தியாவை விராட் கோலி வழிநடத்தி வருகிறார்.

ஜஸ்பிரீத் பும்ரா - படம்: ஏபி

Published On :

கடைசி டெஸ்ட்டில் பும்ரா மருத்துவமனைக்குச் சென்றதால் இந்தியாவை விராட் கோலி வழிநடத்தி வருகிறார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஒரு ஓவர் மட்டுமே வீசிய இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்துவீசும்போது சிறிது பிரச்னை இருப்பதால் ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

பும்ரா சென்றதும் இந்திய அணியை விராட் கோலி வழிநடத்துகிறார்.

பும்ரா இல்லாமலே இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர்.

இந்தியாவின் சார்பாக பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

பும்ரா 2 விக்கெட் எடுத்து வெளியேறினார். நிதீஷ் ரெட்டி 2 விக்கெட்டும் எடுத்து அணிக்கு உதவினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் 14 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பும்ரா இந்தியாவுக்கு முக்கியமான பந்துவீச்சாளர். இரண்டாம் இன்னிங்ஸில் அவர் இல்லாவிட்டால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.