மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பொன் முட்டையிடும் வாத்தை கொல்வதா? பும்ரா கேப்டனாக எதிர்ப்பு!

பும்ராவை இந்தியாவின் கேப்டனாக தேர்வு செய்யக்கூடாதென முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜஸ்பிரீத் பும்ரா

Published On :

ஜஸ்பிரீத் பும்ராவை இந்திய டெஸ்ட் அணியின் முழு நேர கேப்டனாக தேர்வு செய்யக்கூடாதென முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் 1-3 என இந்தியா தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்தது. பும்ரா 32 விக்கெட்டுகள் எடுத்து தொடர் நாயகன் விருது பெற்றார்.

சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் பும்ரா முதுகு வலியால் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.

அதனால் கடைசி இன்னிங்ஸில் பும்ராவால் பந்துவீச முடியவில்லை. ரோஹித் தலைமையில் அனைத்து போட்டிகளும் தோல்வியுற்ற இந்திய அணி அடுத்த கேப்டனாக பும்ராவை நியமிக்கவிருக்கிறது.

இந்த நிலையில் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கூறியதாவது:

பும்ராவை கேப்டனாக்குவதற்கு முன்பு பிசிசிஐ ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க வேண்டும். விக்கெட் எடுப்பதிலும் ஃபிட்டாக இருப்பதில் மட்டுமே பும்ரா கவனம் செலுத்த வேண்டும்.

கேப்டன் எனும் கூடுதல் பொறுப்பைக் கொடுத்து அவரை காயம் ஏற்படுத்தி விடாதீர்கள். பொன் முட்டையிடும் வாத்தை கொன்றுவிடாதீர்கள்.

ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்களாக இருந்துள்ளார்கள். அதனால், அவர்களில் யாருவது ஒருவரை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.

ரோஹித்துக்கு அடுத்து பும்ராவை கேப்டனாக நியமிப்பது சரியாக இருக்காது. ஏனெனில் அவர் ஒருவர்தான் தனது உயிரைக்கொடுத்து அணிக்காக பந்துவீசுகிறார். மற்ற பந்துவீச்சாளர்கள் குறைவான உதவியே செய்கிறார்கள். அதனால்தான் பும்ராவுக்கு அதிகமாக காயம் ஏற்படுகிறது.

ஒரு பேட்டரை கேப்டனாக நியமித்தால் அணியில் ஒரு சமநிலை நிலவும். பும்ரா பந்துவீச்சில் மட்டுமே கவனம் செலுத்தினால் சரியாக இருக்கும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.