ஒருநாள் போட்டிகளில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க: இளம் வீரர்களை வழிநடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி: ஸ்டீவ் ஸ்மித்
ஸ்மிருதி மந்தனா சாதனை
இந்தப் போட்டியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். அவர் இந்த சாதனையை 95 போட்டிகளில் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், ஒருநாள் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களைக் கடந்த 3-வது வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதையும் படிக்க: ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 12) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா! ஸ்மிருதி, தீப்தி, சரணி அசத்தல்!!

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

உலகக் கோப்பையில் இந்த தவறை மீண்டும் செய்யமாட்டோம்: ஸ்மிருதி மந்தனா

டி20 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



