புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஐசிசி நடத்தை விதிமுறைகள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐசிசி நடத்தை விதிமுறைகள் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜனவரி 2025, 8:16 pm IST

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐசிசி நடத்தை விதிமுறைகள் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டின் இறுதியில் நிறைவடைந்தது. இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஐசிசி நடத்தை விதிமுறைகள்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐசிசி நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மகளிர் பிரீமியர் லீக் தொடர் நான்கு நகரங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: ஐசிசியின் படிநிலை 1, படிநிலை 3 அல்லது படிநிலை 3 ஆகியவற்றின் கீழ் விதிக்கப்படும் அபராதங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து பின்பற்றப்படும். இதுவரை ஐபிஎல் தொடரில் அதற்கென தனியாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஐபிஎல் சீசனிலிருந்து ஐசிசி சர்வதேச டி20 போட்டிகளின் விதிமுறைகளை ஐபிஎல் தொடரிலும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடர் லக்னௌ, மும்பை, பரோடா மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.