விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் - படம் | பஞ்சாப் கிங்ஸ்

Published On :13 ஜனவரி 2025, 12:16 pm IST

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் துபையில் நடைபெற்ற மெகா ஏலத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.

இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பந்த், ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் அதிகத் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக மாறினார். அவர் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர் ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன்

கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர், இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து செயல்பட்ட அனுபவம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு உள்ளது. இருவரது கூட்டணியில் தில்லி கேபிடல்ஸ் அணி கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸ் அணி என்மீது நம்பிக்கை வைத்துள்ளதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து பணியாற்றவுள்ளதை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பஞ்சாப் கிங்ஸ் அணி வலுவாக உள்ளது. என் மீது அணி நிர்வாகம் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி பஞ்சாப் கிங்ஸுக்கு முதல் கோப்பையை வென்று தர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.