நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

இலங்கை தொடர்: ஆஸி.க்கு கூடுதல் ஒருநாள் போட்டி சேர்ப்பு!

இலங்கை தொடரில் ஆஸி.க்கு கூடுதலாக ஒரு ஒருநாள் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியினர்.

Published On :16 ஜனவரி 2025, 2:25 pm IST

இலங்கை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதலாக ஒரு ஒருநாள் போட்டி சேர்க்கப்பட்டுதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்ற அதே வேட்கையுடன் இலங்கை செல்லும் ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடருக்கு ஆஸ்திரேலிய அணி தகுதிபெற்ற நிலையில் ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டும் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டி தொடரில் கூடுதலாக ஒரு போட்டி சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இரு அணிகளுக்கும் முதலில் ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஹம்பந்தோடாவில் நடத்தப்படவிருந்தது. தற்போது ஒரு போட்டி சேர்க்கப்பட்டு இரண்டுப் போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.

முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி முறையே ஜனவரி 26 மற்றும் பிப்ரவரி 6 ஆம் தேதியும், ஒருநாள் போட்டிகள் தொடரில் முதல் போட்டி பிப்ரவரி 12 ஆம் தேதியும் மற்றும் 2-வது போட்டி 14 ஆம் தேதியும் நடத்தப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.