முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

முதல் டி20: 13 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்த இந்திய அணி!

சிக்ஸர் மழை பொழிந்த அபிஷேக் ஷர்மா...!

News image

BCCI

Updated On :22 ஜனவரி 2025, 10:17 pm IST

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் விளையாட்டுத் திடலில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டுமே தனியாளாக போராடினார். அவர் 68 ரன்கள் திரட்டிய நிலையில் வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 132 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றிபெற இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 26 ரன்களுக்கும் சூர்யகுமார் யாதவ் ரன் கணக்கை தொடங்காமலும் ஆட்டமிழந்தனர்.

இன்னொருபுறம் சிக்ஸர் மழை பொழிந்த தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் திரட்டி ஆட்டமிழந்தார்.

இதன் காரணமாக 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.