கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

கேப்டனாக அல்ல, தலைவனாக இருக்க விரும்புகிறேன்: சூர்யகுமார் யாதவ்

இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைவனாக இருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.

News image

சென்னை வந்தடைந்த சூர்யகுமார் யாதவ். - படம்: பிடிஐ

Updated On :24 ஜனவரி 2025, 4:19 pm IST

இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அல்லாமல், அணியின் தலைவனாக இருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.

கடந்த டி20 உலகக் கோப்பையுடன் ரோஷித் சர்மா, கோலி ஓய்வு அறிவித்ததால் சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜன.22இல் தொடங்கியது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

2ஆவது டி20 சென்னையில் நாளை (ஜன.25) நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் ஹாட்ஸ்டார் ஸ்பெஷலில் பேசியதாவது:

தலைவனாக இருக்க விரும்புகிறேன்

நான் வெறுமனே கேப்டனாக மட்டுமில்லாமல், தலைவனாக இருக்க விரும்புகிறேன். அணியாக நாங்கள் ஒன்றினை செய்து முடிக்க வேண்டுமானால் அனைவரும் ஒரே மாதிரியாக புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

சில அடிப்படை விஷயங்கள், களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல பழக்கங்களைப் பின் தொடர வேண்டுமென இதுபோல சிறிய விஷயங்கள் மட்டுமே நான் கூறினேன்.

களத்தினுள் இறங்கிய பிறகு, உங்களது உடலை விட்டு போட்டியை மகிழ்ந்து கொண்டாட வேண்டும்.

கேப்டானாக அறிவிக்கப்பட்டபோது...

கேப்டனாக அறிவிக்கப்பட்டதும் நான் எனது குடும்பத்தை அழைத்து பேசினேன். அது உணர்ச்சிபூர்வமான கணமாக இருந்தது. பின்னர், நீண்ட பெருமூச்சி விட்டேன், அந்தக் கணத்தைக் கொண்டாடினேன்.

வீட்டில் உட்கார்ந்து எனது மனைவியுடன் சமைத்து சாப்பிட்டேன். அந்த மாலைப் பொழுது சிறப்பான ஒன்றாக அமைந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.