இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகும் இந்திய ஆல்ரவுண்டர்!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விலகுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகும் இந்திய ஆல்ரவுண்டர்!
படம் | AP
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விலகுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நிறைவடைந்த நிலையில், இன்று (ஜனவரி 25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.

நிதீஷ் குமார் ரெட்டி விலகல்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது, தசைப் பிடிப்பால் அவதிப்பட்ட ரிங்கு சிங் அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் நான்காவது டி20 போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் இருவருக்கும் பதிலாக டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபே மற்றும் ரமன்தீப் சிங் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து டி20 தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட இந்திய அணி விவரம்

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்‌ஷர் படேல் (துணைக் கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரெல், ஷிவம் துபே மற்றும் ரமன்தீப் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com