பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஐசிசி வெளியிட்ட 2024-ஆம் ஆண்டின் சிறந்த டி20 அணி; இடம்பிடித்த 3 இந்திய வீராங்கனைகள்!

கடந்த ஆண்டின் சிறந்த டி20 மகளிரணியை ஐசிசி இன்று (ஜனவரி 25) வெளியிட்டுள்ளது.

படம் | பிசிசிஐ

Published On :

கடந்த ஆண்டின் சிறந்த டி20 மகளிரணியை ஐசிசி இன்று (ஜனவரி 25) வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு முழுவதும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த அணிக்கு தென்னாப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வர்ட் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணியில் மூன்று இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்திய வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மா இருவரும் கடந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய வீராங்கனைகளை தவிர்த்து, இந்த அணியில் இரண்டு தென்னாப்பிரிக்க வீராங்கனைகள், இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளிலிருந்து தலா ஒரு வீராங்கனை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசியின் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணி விவரம்

லாரா வேல்வர்ட் (கேப்டன்), மாரிஸேன் காப், ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, சமாரி அத்தப்பட்டு, ஹேலி மேத்யூஸ், நாட் ஷிவர் பிரண்ட், மெலி கெர், ஓர்லா பிரண்டர்கேஸ்ட் மற்றும் சாதியா இக்பால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.