திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஹாட்ரிக் சாம்பியன்ஸ்..! 3ஆவது முறையாக ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸி.!

மகளிருக்கான ஐசிசி சாம்பியன்ஷிப்பை தொடர்ச்சியாக 3ஆவது முறையாக வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

News image

ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸ்திரேலியா - படம்: ஐசிசி

Updated On :28 ஜனவரி 2025, 7:29 pm IST

மகளிருக்கான ஐசிசி சாம்பியன்ஷிப்பை தொடர்ச்சியாக 3ஆவது முறையாக வென்றுள்ளது ஆஸ்திரேலிய மகளிரணி.

ஆஸி. அணியின் கேப்டன் அலீஸா ஹீலி தொடர்ச்சியாக 3ஆவது முறையாக ஐசிசி சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.

முதன்முதலாக ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் 2014-2016இல் தொடங்கப்பட்டது. அடுத்ததாக 2017-2020லும் 2022-2025 வரையிலுமான சுற்றுகளில் ஆஸி. முதலிடம் பிடித்து கோப்பையை தக்க வைத்துள்ளது.

2022-25 சுற்றில் ஆஸ்திரேலியா இந்தியாவிடம் 3-0, பாகிஸ்தானுடன் 3-0, தென்னாப்பிரிக்காவுடன் 2-1, மேற்கிந்தியத் தீவுகளிடம் 2-0 என வெற்றி பெற்றது.

இங்கிலாந்துடன் ஆஷஸ் தொடரில் 3-0 என வெற்றி பெற்றதும் கோப்பையை உறுதி செய்தது ஆஸ்திரேலிய அணி.

இது குறித்து 34 வயதாகும் அலீஸா ஹீலி கூறியதாவது:

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி வருகிறோம். இந்தச் சுற்று முடிவடைந்ததால் பெண்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அடுத்த சாம்பியன்ஷிப் சுற்றிலும் இதே ஆர்வத்தோடு இருப்போம். ஒருநாள் உலகக் கோப்பைக்கும் இந்தப் போட்டிகள் உதவும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.