சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

15 ஆண்டுகளில் முதல் முறை... சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை!

கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பியுள்ளனர்.

News image
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்- படம் | AP
Updated On :4 ஜூலை 2025, 1:39 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பியுள்ளனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

சொந்த மண்ணில் வந்த சோதனை

இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடத் தவறினர். முதல் 6 பேட்டர்களில் 3 பேர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

பென் டக்கெட், ஆலி போப் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மூவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஸாக் கிராலி 19 ரன்கள் மற்றும் ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு லார்ட்ஸ் திடலில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் இங்கிலாந்து அணியின் முதல் 6 பேட்டர்களில் மூன்று பேர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்திருந்தனர். அதன் பின், இந்த 15 ஆண்டுகளில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் டாப் 6 பேட்டர்களில் மூவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்ததில்லை. ஆனால், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் டாப் 6 பேட்டர்களில் மூவர் டக் அவுட்டாகியுள்ளனர்.

இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய போதிலும், ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி ப்ரூக்கின் அபார ஆட்டம் அணியை சரிவிலிருந்து மீட்டது. இவர்களது பார்ட்னர்ஷிப் 200 ரன்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

For the first time in 15 years, England's top-order batsmen have failed in home matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.