‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? - பயிற்சியாளர் பதில்

5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? -பயிற்சியாளர் பதில்

Published On :

5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பதில் அளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்த தொடர் தொடங்கும் முன்பே ஜஸ்பிரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இது குறித்து, இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பேசும்போது, “பும்ரா தனக்கான உடல் உழைப்புக்கேற்ற அளவுக்கு உடல் திறனுடன் இருக்கிறார். அவர் கடைசி டெஸ்ட்டில் விளையாடுவாரா இல்லையா என்பது பின்னர் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 31 முதல் ஓவலில் தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணியும் ஐந்தாவது டெஸ்ட்டில் களமிறங்குகின்றன.

Summary

Will Bumrah play in the 5th Test? Or not? - Coach answers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.