அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டனா?

அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அலி அகா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

பாகிஸ்தான் அணி வீரர்கள் (கோப்புப் படம்)

Updated On :8 ஜூன் 2025, 8:08 pm IST

அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அலி அகா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷான் மசூத் செயல்பட்டு வருகிறார். டி20 அணியின் கேப்டனான சல்மான் அலி அகா, டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தானின் கிரிக்கெட் வளர்ச்சியை கவனிக்க குழு ஒன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருக்கு தங்களது பரிந்துரைகளை தெரிவிப்பர். அதன் அடிப்படையில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரிலிருந்து, பாகிஸ்தானுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான சுழற்சி தொடங்குகிறது.

இந்த ஆண்டில் பாகிஸ்தான் அணி வெறும் 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.