பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

டபிள்யூடிசி: முதல் இன்னிங்ஸில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஸ்டீவ் ஸ்மித் பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் கற்றுக்கொண்ட பாடம் குறித்து ஸ்மித் பேசியதாவது...

News image

செய்தியாளர் சந்திப்பில் ஸ்டீவ் ஸ்மித். (உள்படம்: ஸ்மித் ஆட்டமிழந்த விதம்) - படங்கள்: ஐசிசி

Updated On :12 ஜூன் 2025, 12:31 pm IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து பேசியுள்ளார்.

டபிள்யூடிசி இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212-க்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களில் தெ.ஆ. அணியின் எய்டன் மார்க்ரம் ஓவரில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

டெஸ்ட்டில் 10,000 ரன்களை கடந்த ஸ்மித் ஒரு பார்ட் டைம் (பகுதி நேர) சுழல்பந்து வீச்சாளருக்கு ஆட்டமிழந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஸ்மித் கூறியதாவது:

ஒரு பகுதி நேர சுழல் பந்துவீச்சாளரிடம் எட்ஜ் கொடுக்கக் கூடாது. (சிரிக்கிறார்). இதை எப்படி செய்தேன் என நான் இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

மீண்டும் அதைச் செய்யக்கூடாது. அடுத்த எங்கள் கையில் என்ன இருக்கிறதோ (2-ஆவது இன்னிங்ஸை குறிப்பிடுகிறார்) அதைச் சரியாக செய்ய வேண்டும் என்றார்.

லார்ட்ஸ் திடலில் வெளிநாட்டு வீரர் ஒருவர் அதிகமான ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்துக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.