
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று(ஜூன் 23) இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார். அவரைத் தொடர்ந்து, ரிஷப் பந்த்தும் சதமடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம், இந்தியா மொத்தம் 370 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதன்மூலம், இந்தியா 370 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்டிங் செய்து 21 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்துள்ளது.
இன்னும் ஒரேயொரு நாள் ஆட்டம் மட்டுமே இருப்பதால் இந்த டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிவடைய வாய்ப்பு அதிகமுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.