நியூஸி. சுழலில் இந்தியா திணறல்!

பரபரப்பான கட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி...
நியூஸி. சுழலில் இந்தியா திணறல்!
@BLACKCAPS
Updated on
1 min read

துபை : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய பேட்ஸ்மென்களை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

நியூஸிலாந்து நிர்ணயித்த 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில், விக்கெட் இழப்பின்றி 20 ஓவர்களுக்குள் 105 ரன்களைக் குவித்த இந்திய அணிக்கு அதன்பின் சோதனை காத்திருந்தது.

ஷுப்மன் கில், விராட் கோலி அடுத்தடுத்த பந்துகளில் நடையைக் கட்ட இந்தியாவின் ரன் ரேட் சரிந்தது. இந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவும் 76 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

இப்போது இந்திய அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

சிறப்பான தொடக்கம் அளித்த ஷுப்மன் கில்லை நியூஸிலாந்து கேப்டன் சாண்ட்நெர் தமது சுழற் பந்துவீச்சில் சிக்க வைத்து ஆட்டமிழக்கச் செய்தார். அவருக்குப்பின் களம் கண்ட விராட் கோலி, மிக்கேல் பிராஸ்வெல் வீசிய முதல் பந்திலேயே எல்.பி.டபில்யூ முறையில் டக்-அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அவர் எடுத்த ரிவீயூ வீணானது.

இந்த நிலையில், ஆட்டம் மந்தமாகவே, ரச்சின் ரவீந்திரா வீசிய பந்தை ரோஹித் சர்மா கிரீஸை விட்டு இறங்கிவந்து அடிக்க முற்பட, விக்கெட்கீப்பர் லாதம் அவரை அவுட் செய்து வெளியேற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com