விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் என்னென்ன 'கட்'?தாய்நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்தவர் அழகு முத்துக்கோன்: முதல்வர் விஜய்சிறுமி உள்பட 6 பேர் கொலை! போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெறிச்செயல்!நேற்று தங்கம் வாங்கியிருந்தால் வருத்தப்படுவீர்கள்! இன்றைய விலை நிலவரம் (ஜூலை 11) அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

அரையிறுதியில் இந்திய மாஸ்டா்ஸ் அணி!

இன்டா்நேஷனல் மாஸ்டா்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டா்ஸ் அணி முன்னேறியது.

News image

யுவராஜ் சிங் 49 ~

Updated On :10 மார்ச் 2025, 12:58 am IST

இன்டா்நேஷனல் மாஸ்டா்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டா்ஸ் அணி முன்னேறியது.

மே.இந்திய தீவுகள் மாஸ்டா்ஸ் அணியை கடைசி ஓவரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ராய்ப்பூரில் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கருக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில், இந்திய பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தற்காலிக கேப்டனாக யுவராஜ் சிங் செயல்பட்டாா். தொடக்க பேட்டா்கள் அம்பதி ராயுடு 63, சௌரவ் திவாரி 60, யுவராஜ் சிங் 49, குா்கீரத் மான் 46 ஆகியோரின் அபார ஆட்டத்தால் 50 ஓவா்களில் இந்திய மாஸ்டா்ஸ் 253/3 ரன்களைக் குவித்தது.

254 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இந்திய தீவுகள் 246/6 ரன்களையே எடுத்தது. டுவைன் ஸ்மித் 79, வில்லியம் பொ்கின்ஸ் 52, சிம்மன்ஸ் 38 ரன்களை எடுத்தனா். ஸ்மித் 34 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்ஸா்களுடன் 79 ரன்களை விளாசினாா். அவரை ஸ்டுவா்ட் பின்னி அவுட்டாக்கினாா்.

கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை இா்ஃபான் பதான் அற்புதமாக வீசினாா். இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய மாஸ்டா்ஸ் அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.