முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

க்ளென் பிலிப்ஸ்தான் சிறந்த ஃபீல்டர்..! ஒப்புக்கொண்ட ஜான்டி ரோட்ஸ்!

இந்தத் தலைமுறையின் சிறந்த ஃபீல்டர் க்ளென் பிலிப்ஸ்தான் என ஜான்டி ரோட்ஸ் ஒப்புக்கொண்டார்.

News image

க்ளென் பிலிப்ஸ், ஜான்டி ரோட்ஸ் - படங்கள்: எக்ஸ் / ஜான்டி ரோட்ஸ்

Updated On :11 மார்ச் 2025, 6:58 pm IST

இந்தத் தலைமுறையின் சிறந்த ஃபீல்டர் க்ளென் பிலிப்ஸ்தான் என ஜான்டி ரோட்ஸ் ஒப்புக்கொண்டார்.

கிரிக்கெட்டில் ஃபீல்டிங் என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ்தான்.

தற்போது, அவருக்குப் போட்டியாக நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் பிலிப்ஸ் பல சிறந்த கேட்ச்சுகளைப் பிடித்து அசத்தினார்.

பாயும் புலி, ஃபிளையிங் பிலிப்ஸ் எனப் பலவாறு க்ளென் பிலிப்ஸை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகிறார்கள்.

ஒருவர் எக்ஸ் தளத்தில் இந்தத் தலைமுறையின் சிறந்த ஃபீல்டர் க்ளென் பிலிப்ஸ்தான். மன்னிக்கவும் ஜான்டி ரோட்ஸ் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைப் பகிர்ந்த ஜான்டி ரோட்ஸ், “மன்னிப்புக் கேட்காதீர்கள், நானும் இதை ஒப்புக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இது கிரிக்கெட் உலகில் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, 55 வயதிலும் விழுந்து மாஸ்டர்ஸ் லீக்கில் ஃபீல்டிங் செய்து அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒப்புக்கொண்ட ஜான்டி ரோட்ஸ்

ஒப்புக்கொண்ட ஜான்டி ரோட்ஸ் - படம்: எக்ஸ் / ஜான்டி ரோட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.