ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 150ஆவது ஆண்டை முன்னிட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் கிரிக்கெட் திடலில் முதல்முறையாக 1877ஆம் ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. 100ஆவது போட்டியிலும் அங்குதால் நடைபெற்றது.
முதல் போட்டி, 100ஆவது போட்டிகளிலும் ஆஸி. 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2027ஆம் ஆண்டு மார்ச்.11-15ஆம் தேதிகளில் இந்த டெஸ்ட் போட்டி இரவுப் பகலாக எம்சிஜியில் (மெல்போர்ன் கிரிக்கெட் திடல்) நடைபெறுமென கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
பிங்க் பந்தில் அசத்தும் ஆஸி.
150ஆவது டெஸ்ட் போட்டி இரவுப் பகலாக பிங்க் பந்தில் நடைபெறவிருக்கிறது. பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஆஸி. அணி 13போட்டிகளில் 12இல் வெற்றி பெற்றுள்ளது.
ஏற்கனவே ஆஸி., இங்கிலாந்து அணிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறன்றன. இதிலும் ஆஸி. அணியே கோப்பையை தக்கவைத்துள்ளது.
அடுத்த ஆஷஸ் 2025-2026 தொடர் நவம்பரில் தொடங்குகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸி. அரையிறுதியில் வெளியேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Counting down to 150 years â³ pic.twitter.com/G63wm6iVt8
— Cricket Australia (@CricketAus) March 11, 2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிா் டெஸ்ட்: இந்தியா 285

லார்ட்ஸ் மைதானத்தின் முதல் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்! இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன!

இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி மழையினால் நிறுத்தம்..! அறிமுக வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பு!







