விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

2025 ஐபிஎல் கோப்பையை பஞ்சாப் அணி வெல்லும்.! -ஷ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் அணி ஐபிஎல் கோப்பை வெல்லும் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

News image

ஷ்ரேயாஸ் ஐயர்..

Updated On :19 மார்ச் 2025, 8:49 am

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி கோப்பை வெல்லும் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. மார்ச் 25 ஆம் தேதி நடைபெறும் லீக் சுற்றின் 5-வது போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி கில் தலைமையிலான குஜராத்தை எதிர்கொள்ள இருக்கிறது.

கடந்தாண்டு கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று தந்த ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து கலட்டிவிடப்பட்டார். இதனால், மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி அவரை ரூ.26.75 கோடிக்கு எடுத்து புதிய கேப்டனாக நியமித்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி உள்பட 5 கோப்பைகளை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர், இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை பஞ்சாப் அணிக்கான வென்று புதிய வரலாறு படைக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், “என்னை ஏலத்தில் எடுத்தபோது பஞ்சாப் அணி இதுவரை கோப்பையை வென்றிருக்கவில்லை. அந்த அணிக்கு கோப்பையை வென்று தர வேண்டும் என நினைத்தேன். அது ஒரு வரலாற்றுச் சாதனையாக இருக்கும். தொடரின் இறுதியில் பஞ்சாபி கொண்டாட்டங்கள் களைகட்டும்.

2008 ஆம் ஆண்டு மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பால் பாய்-ஆக இருந்தேன். அதன்பின்னர், மும்பை 14 வயதுக்குள்பட்டோருக்கான அணியில் விளையாடினேன். அப்போது ஐபிஎல்லில் விளையாடிய பதான், ராஸ் டெய்லர், யுவராஜ் சிங்கின் ஆட்டங்கள் கண்ணுக்குள்ளே இருக்கின்றன. பால் பாய்யாக இருந்து தற்போது கேப்டனாக உயர்ந்துள்ளேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.