இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணி உள்ளூர் அணியைப் போன்று விளையாடியது. மிகவும் வெட்கப்படும்படியான ஆட்டத்தை பாகிஸ்தான் வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரைப் பாருங்கள். ஐபிஎல் தொடரில் விளையாடும் இளம் வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடினால், அவர்கள் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்திவிடுவார்கள். திறமையின் அடிப்படையில் இந்திய அணியில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால், அவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறுகிறார்கள். ஆனால், பாகிஸ்தான் அணியில் வீரர்கள் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை என்றார்.