காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

கேப்டன் ரோஹித் சர்மாவை ஈடுசெய்யவே முடியாது: மைக்கேல் கிளார்க்

டெஸ்ட்டில் ஓய்வுபெற்ற ரோஹித் சர்மா குறித்து மைக்கேல் கிளார்க் பேசியதாவது...

News image

மைக்கேல் கிளார்க், ரோஹித் சர்மா. - படம்: இன்ஸ்டா / மைக்கேல் கிளார்க்.

Updated On :11 மே 2025, 3:12 pm IST

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக மே.7ஆம் தேதி அறிவித்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடைசியாக ரோஹித் சர்மா பிஜிடி தொடரில் விளையாடினார். 3-2 என ஆஸ்திரேலியாவுடன் தோல்வியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4,301 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 12 சதங்கள், 18 அரைசதங்களும் அடங்கும்.

இவர் குறித்து முன்னாள் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது:

ரோஹித் சர்மாவின் இழப்பை இந்தியா எப்படி சமாளிக்கும்?

ரோஹித் சர்மா மாதிரியான ஒரு வீரரை எந்த ஒரு அணியும் மிஸ் செய்யும். ஆனால், புத்திசாலிதனமான ஒரு கேப்டனாக அவரை யாருமே ஈடுசெய்ய முடியாது. ரோஹித் சர்மா போட்டியை சிறப்பாக கவனிப்பார் என்றார்.

ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக கே.எல்.ராகுலை தொடக்க வீரராக களமிறக்கலாம். ஆனால், கேப்டனாக அவருக்குப் பதிலாக யாரை நியமிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜஸ்பிரீத் பும்ரா ஏற்கனவே கேப்டனாக அசத்தியிருந்தாலும் நீண்டகால நோக்கில் ஷுப்மன் கில் கேப்டனாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.