சொந்த மண்ணில் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதால் எந்தவொரு அழுத்தமும் இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது. விரைவில் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரவுள்ள நிலையில், அணிகள் பலவும் இருதரப்பு ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், சொந்த மண்ணில் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதால் எந்தவொரு அழுத்தமும் இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைத் தொடர் சொந்த மண்ணில் நடைபெறவுள்ளது என்பதால் எங்களுக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை. சொந்த மண்ணில் விளையாடுவதை அழுத்தம் என்பதை விட சுதந்திரமாக விளையாடவுள்ளோம் என்றே கூற வேண்டும் என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணி அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.
Summary
South African player Kagiso Rabada has stated that there is no pressure whatsoever in playing the World Cup tournament on home soil.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘உலக சாம்பியனுக்கே இந்த நிலைமையா’... உலகக் கோப்பை நேரடி தகுதியை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்!

ஒருநாள் உலகக் கோப்பை 2027 நடைபெறும் 12 இடங்கள்..! 24 ஆண்டுகளுக்குப் பின் ஆப்பிரிக்காவில்!

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு... சொந்த ஊரில் கால்பந்து போட்டியைக் கண்டுகளித்த மெஸ்ஸி!

2 கோல்கள் அடித்த நெய்மர்..! கொண்டாட்டத்தின் மூலமாக விமர்சனங்களுக்கு பதிலடி!
விடியோக்கள்

”திட்டங்களின் பெயரை விட முக்கியம்...” அமைச்சர் அருண்ராஜ் | TVK




