மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்!

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தது குறித்து...

News image

மிட்செல் ஸ்டார்க் (கோப்புப் படம்) - படம்: ஏபி

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:31 pm IST

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் (36 வயது) கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார். இடது கை பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டை எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.

டார்வினில் நடைபெற்றுவரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 53 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார்.

வங்கதேச அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 21 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஷத்மான் இஸ்லாம் என்ற தொடக்க வீரரை மிட்செல் ஸ்டார்க் போட்டியின் 8.2ஆவது ஓவரில் விக்கெட் வீழ்த்தினார்.

இந்த விக்கெட்டுடன் 434 என்ற இலக்கை அடைந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இடது கை பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டை எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட்டில் இடதுகை பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியல்

1. மிட்செல் ஸ்டார்க் - 434 விக்கெட்டுகள் (ஆஸி.)

2. ரங்கன ஹேரத் - 433 விக்கெட்டுகள் (இலங்கை)

3. வாசிம் அக்ரம் - 414 விக்கெட்டுகள் (பாகிஸ்தான்)

4. டேனியல் வெட்டோரி - 362 விக்கெட்டுகள் (நியூசிலாந்து)

5. சமிந்தா வாஸ் - 355 விக்கெட்டுகள் (இலங்கை)

Summary

Mitchell Starc creates new history in Test cricket!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.