நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

107 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த ஸ்டீவ் ஸ்மித்..! பிளே ஆப்ஸுக்கு முன்னேறுமா சிட்னி சிக்ஸர்?

பிபிஎல் தொடரில் அசத்தும் ஸ்டீவ் ஸ்மித் குறித்து...

News image

ஸ்டீவ் ஸ்மித் - படம்: எக்ஸ் / சிட்னி சிக்ஸர்

Updated On :16 ஜனவரி 2026, 4:18 pm IST

பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணியைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் 107 மீட்டருக்கு சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளார்.

சிட்னி தண்டர் அணி நிர்ணயித்த 190 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணியில் கேப்டன் டேவிட் வார்னட் சதம் (110*) அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தத் தொடரிலிருந்து சிட்னி தண்டர் அணி வெளியேறினாலும் சிட்னி சிக்ஸர் அணியின் பிளே ஆப்ஸ் நம்பிக்கையை தடுக்கும் வாய்ப்பிருக்கிறது.

இந்தப் போட்டியில் நாதன் மெக்ஆண்ட்ரூ வீசிய 3.3 ஆவது பந்தில் ஸ்டீவ் ஸ்மித் 107 மீட்டருக்கு லெக் ஸைடில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.

அந்தப் பந்து திடலின் உச்சிக்குச் சென்று தடுப்பில் மோதி கீழே விழுந்தது.

இந்தப் போட்டியில் வென்றால் சிட்னி சிக்ஸர் அணி பிளே ஆப்ஸ் செல்லும் வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சிட்னி சிக்ஸர் அணி 9 ஓவர்கள் முடிவில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்துள்ளது.

பாபர் அசாம் 37, ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்கள். பந்துவீச்சில் சாம் கரண் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

Summary

In the BBL series, Steve Smith of the Sydney Sixers team has impressed by hitting a six that travelled 107 meters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.