முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஓய்வெடுக்கப் போவதில்லை; ரஞ்சி கோப்பையில் விளையாடும் ஷுப்மன் கில்!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சௌராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார்.

News image

கேப்டன் ஷுப்மன் கில் - படம் | AP

Updated On :19 ஜனவரி 2026, 7:47 pm IST

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சௌராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்று அசத்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுநாள் (ஜனவரி 21) முதல் தொடங்குகிறது.

டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத ஷுப்மன் கில், ரஞ்சி கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடுவதாக முடிவெடுத்துள்ளார்.

ரஞ்சி கோப்பையில் பஞ்சாபுக்கான நாக் அவுட் சுற்று வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பஞ்சாப் அணி லீக் சுற்றில் மீதமுள்ள 3 போட்டிகளிலும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தால், நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்பிருக்கிறது. இந்த சூழலில் ஷுப்மன் கில் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பஞ்சாப் அணியின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு, ஷுப்மன் கில் ஓய்விலிருக்க விரும்பவில்லை. அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 11 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian team captain Shubman Gill will be playing for Punjab in the Ranji Trophy cricket tournament against Saurashtra.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.