இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சௌராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்று அசத்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுநாள் (ஜனவரி 21) முதல் தொடங்குகிறது.
டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத ஷுப்மன் கில், ரஞ்சி கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடுவதாக முடிவெடுத்துள்ளார்.
ரஞ்சி கோப்பையில் பஞ்சாபுக்கான நாக் அவுட் சுற்று வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பஞ்சாப் அணி லீக் சுற்றில் மீதமுள்ள 3 போட்டிகளிலும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தால், நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்பிருக்கிறது. இந்த சூழலில் ஷுப்மன் கில் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பஞ்சாப் அணியின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு, ஷுப்மன் கில் ஓய்விலிருக்க விரும்பவில்லை. அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 11 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian team captain Shubman Gill will be playing for Punjab in the Ranji Trophy cricket tournament against Saurashtra.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இரட்டைச் சதத்தைத் தவறவிட்ட ஷுப்மன் கில்: 402 ரன்களைக் குவித்து இந்தியா சாதனை!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!

டெஸ்ட்டில் அதிக சராசரி... டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஷுப்மன் கில்!

கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் சதம்; வலுவான நிலையில் இந்திய அணி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




