தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பிபிஎல் தொடரிலிருந்து விலகிய பாபர் அசாம்..! காரணம் என்ன?

பிபிஎல் தொடரில் இருந்து விலகிய பாபர் அசாம் குறித்து...

Babar Azam

ரசிகர்களுடன் பாபர் அசாம். - படம்: எக்ஸ் / சிட்னி சிக்ஸர்.

Published On :

பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணியிலிருந்து பாபர் அசாம் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தனது தேசிய அணிக்கான போட்டியில் பங்கேற்க இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அசாம் (31 வயது) பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.

மெதுவாக விளையாடுவதாக பாபர் அசாம் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவரது விலகல் முடிவு சிட்னி சிக்ஸர் ரசிகர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது.

பிபிஎல் தொடரில் 11 போட்டிகளில் 202 ரன்கள் எடுத்துள்ள பாபர் அசாமின் ஸ்டிரைக் ரேட் 103.06ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிட்னி சிக்ஸர் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் பாபர் அசாமுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பிள்ளது.

சமீபத்தில் மார்க் வாக் சிட்னி சிக்ஸர் பிளேயிங் லெவனில் இருந்து பாபர் அசாமை நீக்க வேண்டுமெனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், பாபர் அசாம் விலகியுள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

அடுத்ததாக, ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்குச் சென்று டி20 தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க பாபர் அசாம் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Summary

After a torrid campaign in which he batted at a 103 strike-rate and became a growing concern for the Sixers, Babar leaves in the middle of a crunch playoff run.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.