வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியான ஆட்டத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்ய வேண்டாம் என விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அண்மையில் நிறைவடைந்தது. இந்த ஐபிஎல் தொடரில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன், விருதுகள் பலவற்றையும் வென்றார் ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அதிரடியாக விளையாடிய அவர் 16 போட்டிகளில் 776 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
இந்த நிலையில், டி20 வடிவிலான கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி போன்ற வீரர்கள் கிடைப்பது மிகவும் அரிது, அவர் அவரது அதிரடியாக விளையாடும் அணுகுமுறையில் எந்தவொரு மாற்றமும் செய்யக் கூடாது என விராட் கோலியின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வைபவ் சூர்யவன்ஷி மிகவும் திறமையான வீரர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஐபிஎல் தொடரில் அவர் விளையாடி விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. முதல் தர, சர்வதேச மற்றும் உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது மிகவும் பாராட்டுதலுக்குரியது.
வைபவ் சூர்யவன்ஷி மிகவும் சிறப்பான திறமை வாய்ந்த வீரர். அவர் நம்பமுடியாத விதத்தில் சிக்ஸர்களை விளாசுகிறார். டி20 வடிவிலான போட்டிகளில் அவரது பேட்டிங் அணுகுமுறையில் எந்தவொரு மாற்றமும் செய்யாமல், அதிரடியான ஆட்டத்தையே தொடர வேண்டும் என்றார்.
Summary
Virat Kohli's coach, Rajkumar Sharma, has stated that Vaibhav Suryavanshi should not make any changes to his aggressive style of play.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
என்னுடைய இலக்கை ஐபிஎல் தொடங்கும் முன்பே எழுதி வைத்துவிட்டேன்: வைபவ் சூர்யவன்ஷி

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட வேண்டும்: முன்னாள் அணித் தேர்வுக்குழுத் தலைவர்

ஐபிஎல் 2026: வைபவ் சூர்யவன்ஷி சாதனை! அதிக ரன்கள் குவித்த டாப் - 5 பேட்டர்கள்!







