இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி தொடர் ஒரு மணி நேரம் முன்னதாக நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், 15 வயதான சூர்யவன்ஷிக்கு முதல்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், இங்கிலாந்து தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு (உள்ளூர் நேரப்படி 6.30 மணி) எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்திய பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போக்கில், 3 டி20 போட்டிகள் 1 மணிநேரம் முன்னதாக தொடங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
முதலாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் இரவு 11 மணியிலிருந்து ஒரு மணிநேரம் குறைத்து இரவு 10 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 8 மணியிலிருந்து 7 மணிக்குத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
ECB has shifted the timing of 3 T20Is one hour earlier to maximize the TV viewership in the month of July!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இங்கிலாந்து, அயர்லாந்து தொடரிலிருந்து சிராஜ் விடுவிப்பு.. மாற்று வீரர் இவரா?

நியூசி.க்கு எதிராக இங்கிலாந்து அபார வெற்றி; மீண்டும் எழுச்சி பெறுகிறதா பேஸ்பால் யுக்தி?

இங்கிலாந்து, அயர்லாந்து தொடருக்கான இந்திய டி20 அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்திய வில்வித்தை அணி அறிவிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking


