மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

டி20 உலகக் கோப்பையுடன் நள்ளிரவில் கோயிலுக்குச் சென்ற ஜெய் ஷா!

டி20 உலகக் கோப்பையுடன் நள்ளிரவில் ஜெய் ஷா உள்ளிட்டோர் கோயிலுக்குச் சென்றது பற்றி...

News image

அகமதாபாத் கோயிலில் ஜெய் ஷா, கம்பீர், சூர்யகுமார் - ANI

Updated On :9 மார்ச் 2026, 6:05 am

டி20 உலகக் கோப்பையுடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஹனுமன் கோயிலுக்குச் சென்ற ஐசிசி தலைவர் ஜெய் ஷா சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

அவருடன் இந்திய அணி பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் சென்றனர்.

ஐசிசி டி20 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி, மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள ஹனுமன் கோயிலுக்கு நள்ளிரவு 1.20 மணியளவில் கோப்பையுடன் சென்ற ஜெய் ஷா, கெளதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.

Summary

Jay Shah went to the temple at midnight with the T20 World Cup!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.