ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதை வென்ற சாகிப்ஸதா ஃபர்ஹான், அருந்ததி ரெட்டி!
ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதினை சாகிப்ஸதா ஃபர்ஹான் மற்றும் அருந்ததி ரெட்டி வென்றுள்ளனர்.

அருந்ததி ரெட்டி, சாகிப்ஸதா ஃபர்ஹான்
படம் | ஐசிசி

அருந்ததி ரெட்டி, சாகிப்ஸதா ஃபர்ஹான்
படம் | ஐசிசி
ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதினை பாகிஸ்தான் வீரர் சாகிப்ஸதா ஃபர்ஹான் மற்றும் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி வென்றுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. அதன் படி, பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாகிப்ஸதா ஃபர்ஹான் மற்றும் சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் அருந்ததி ரெட்டி இருவரும் தேர்வாகியுள்ளனர்.
அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாகிப்ஸதா ஃபர்ஹான் மிகவும் அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தார். ஒரே டி20 உலகக் கோப்பைத் தொடரில் இரண்டு சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும், டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் அவர் முறியடித்தார்.
அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய மகளிரணி விளையாடியது. இந்தத் தொடரில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி மிகவும் அபாரமாக பந்துவீசினார். முதல் டி20 போட்டியில் 4 விக்கெட்டுகளும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் தலா இரண்டு விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...