/

ஜென்டில்மேன் தோனி..! ருதுராஜ் கெய்க்வாட் பகிர்ந்த சுவாரசியம்!

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டி குறித்து...

News image

ருதுராஜுக்கு வழிவிட்ட தோனி.

படம்: சிஎஸ்கே.

Updated On :28 மார்ச் 2026, 6:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மீது மிகுந்த மரியாதை இருப்பதாக தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு எம்.எஸ். தோனிக்குப் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருக்கிறார். இன்னும் இவரது தலைமையில் ஒரு கோப்பைக் கூட வாங்காமல் இருக்கிறது.

எம்.எஸ். தோனிக்கு காலின் பின்புறத்தில் ஏற்பட்ட காயம் குணமாக 2 வாரங்கள் ஆகுமென்பதால் அவர் முதலிரண்டு வாரங்கள் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே தனது முதல் போட்டியில் ராஜஸ்தானை மார்ச் 30ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்த நிலையில், சிஎஸ்கேவின் கேப்டன் ருதுராஜ் அந்த அணியின் யூடியூப் பக்கத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தோனி அண்ணா மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அணியின் கலந்தாலோசனையில் அவர் பங்கேற்கமாட்டார். என்னையும் ஃபிளெமிங்கையும் நம்பி அனுப்பி விடுவார். மேலும் எங்களிடம் தோனி ‘எனது அறிவுரைகளை நீங்கள் அப்படியே கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை’ என்பார்.

எங்களது கருத்துகள்தான் அணியை வழிநடத்த வேண்டுமென தோனி விரும்புகிறார். எது சரி, தவறு என தோனி பார்ப்பதில்லை. எதாவது பிரச்னையை பார்த்தால் அதை எப்படி சரி செய்யலாம் என்பதில் கவனம் செலுத்துகிறார். அவர் மாதிரியான ஒரு நிலையில் அவர் தன்னைப் பின் தங்கி, எங்கள் மீது நம்பிக்கை வைப்பது மிகப்பெரிய விஷயம் என்றார்.

இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தபோதும் தோனி இதே மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்றியது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் தலைமைப் பண்பில் தோனி ஒரு ஜென்டில்மேன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என ரசிகர்கள் யூடியூப் பக்கத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.