தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் முதல்முறையாக சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் முதல்முறையாக அபராதத்தையும் பெற்றுள்ளது.
நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 212/2 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் அதிகமான வேகப் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தியதால், கூடுதல் நேரம் செலவிடப்பட்டது.
முதல்முறையாக இந்த சீசனில் இந்தத் தவறைச் செய்ததால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறையும் இதையே செய்தால் அபராதம் இரட்டிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Csk captain Ruturaj Gaikwad fined Rs 12 lakh for slow over-rate.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

காயம்பட்ட சிங்கங்கள்..! சிஎஸ்கே கேப்டனின் வாக்குறுதி!

ஜென்டில்மேன் தோனி..! ருதுராஜ் கெய்க்வாட் பகிர்ந்த சுவாரசியம்!
தொடக்க வீரர்களில் மாற்றம்..! சிஎஸ்கே கேப்டன் அறிவிப்பு!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


