குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நேற்றிரவு (மே.21) நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 229/4 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் ஷிவம் துபே விக்கெட்டை தனது ஃபீல்டிங் மூலமாக வீழ்த்திய ஷுப்மன் கில் திடலில் அமர்ந்திருந்த சிஎஸ்கே ரசிகர்களைப் பார்த்து வாயின் மீது விரல் வைத்து “அமைதியாக இருக்கவும்” என்பது போல சைகை காண்பிப்பார்.
இதேபோல வெற்றிக்குப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிராஜ், பட்லர் உடன் அமர்ந்து வாயின்மீது விரல் வைத்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நன்றி 2. மஞ்சள் விளக்குகள். நீலம் முடிந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிஎஸ்கே அணியை வீழ்த்தியதைக் குறிப்பிட்டு ஷுப்மன் கில் பகிர்ந்திருக்கும் இந்தப் புகைப்படம் சிஎஸ்கே ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Shubman Gill's Instagram post is vital after Knocking out CSK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாங்கள் தோல்விக்குத் தகுதியானவர்கள்..! மனம் திறந்த குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்!

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

ஷுப்மன் கில் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!







