டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

இந்த சீசன் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடினோம்: துருவ் ஜுரெல்

நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.

News image

துருவ் ஜுரெல் - படம் | ராஜஸ்தான் ராயல்ஸ் (எக்ஸ்)

Updated On :30 மே 2026, 3:38 pm IST

நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறத் தவறியது.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு விக்கெட் கீப்பராக பந்துவீச்சாளர்களிடம் பேசும்போது, அவர்களிடம் நீங்கள் இப்படி பந்துவீசுங்கள் என ஒருபோதும் நான் கூறியதில்லை. நீங்கள் மிகவும் நன்றாக பந்துவீசக் கூடியவர்கள், அதன் காரணமாக அணியில் இடம்பெற்று விளையாடுகிறீர்கள் என்பதையே அவர்களிடம் கூறுவேன். அணியில் இணைந்துள்ள வீரர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது.

அணியில் உள்ள வீரர்களிடத்தில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் எனக் கூறினேன். எந்த மாதிரியான பந்துவீச்சை வெளிப்படுத்த திட்டமிட்டிருந்தாலும், உங்களது திட்டங்களில் தெளிவாக இருங்கள் எனக் கூறினேன். அதிகம் யோசிக்காதீர்கள். நாம் நன்றாக விளையாட வேண்டியிருக்கிறது. நேர்மறையான கிரிக்கெட்டினையும் விளையாட வேண்டியிருக்கிறது எனக் கூறினேன். நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதுமே நாங்கள் அனைவரும் நேர்மறையான கிரிக்கெட்டினை விளையாடினோம் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய துருவ் ஜுரெல் 16 போட்டிகளில் 515 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Rajasthan Royals player Dhruv Jurel has stated that he played positive cricket throughout the current IPL season.