காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்வு; 23,200 ஐ கடந்த நிஃப்டி!!மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

மகளிர் பிரீமியர் லீக் 2027: ஏலம், போட்டிகளுக்கான தேதிகள் அறிவிப்பு!

மகளிர் பிரீமியர் லீக் 2027 சீசனுக்கான போட்டிகள் நடைபெறும் தேதிகள் குறித்து...

Women's Premier League poster.

மகளிர் பிரீமியர் லீக் போஸ்டர். - படம்: எக்ஸ் / டபிள்யூபிஎல்டி20

Published On :

இந்தியாவில் நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் 2027 சீசனுக்கான போட்டிகள் நடைபெறும் தேதிகளை அதிகாரபூர்வமாக பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆடவருக்காக நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போலவே மகளிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) போட்டிகளை பிசிசிஐ நடத்துக்கின்றன. முதல் சீசன் 2023ல் நடைபெற்றது.

நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசன் 2027ஆம் ஆண்டில் ஜனவரி 14 முதல் பிப்,7ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

இதற்கான ஏலம் வரும் அக்.28ஆம் தேதி கொச்சியில் நடைபெறுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மகளிர் கிரிக்கெட்டில் உலகின் மிகப்பெரிய டி20 லீக்கான டாடா டபிள்யூபிஎல் விளையாட்டின் முன்னேற்றத்துக்காக தன்னை முன்னிறுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளுடன் உலகின் அனைத்து வீராங்கனைகளும் உயர்தர கிரிக்கெட்டில் பங்கேற்று தங்கள் திறமைகளை வளர்க்க வாய்ப்பினை உருவாக்குகிறது.

வீராங்கனைகளை தக்கவைப்பதற்கான கடைசி தேதி செப்.28ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த சீசனுக்கான யார் யார் எந்தெந்த இடத்தில் தேவையோ அவர்களை எல்லாம் ஐந்து அணிகளும் தக்கவைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

Summary

Women's Premier League WPL 2027 to staged from January 14 to February 7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.