காயத்திலிருந்து மீண்டு வந்த ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பு!
முந்தைய ஆட்டத்தில் காயம் காரணமாக பங்கேற்காமல் இருந்த மும்பை கேப்டன் ரோஹித் சர்மா...


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
முந்தைய ஆட்டத்தில் காயம் காரணமாக பங்கேற்காமல் இருந்த மும்பை கேப்டன் ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் விளையாடி வருகிறார். மும்பையில் நடைபெறும் இந்த ஆட்டத்தைக் காண 21,000 அடித்தட்டு மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியில் லியம் லிவிங்ஸ்டோன், கெளதம் போன்றோரும் மும்பை அணியில் ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.
மும்பை அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...