நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பவர்பிளே பகுதியில் இஷ்டத்துக்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் சிஎஸ்கே!

சென்னை அணி பவர்பிளே பகுதியில் அதிக விக்கெட்டுகளை இழந்து அதிக ரன்களும் குவிக்காமல் இருந்தாலும்...

News image
Updated On :27 ஏப்ரல் 2019, 7:25 am

எழில்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் இந்தமுறை மிகவும் ஏமாற்றுகிறது. தோனியைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் ஃபார்மில் இல்லை. அதிலும் பவர்பிளேயில் (1-6 ஓவர்கள்) அதிக விக்கெட்டுகளை இழப்பதால், பின்னால் வரும் வீரர்களுக்குப் பெரும் சுமையாகிவிடுகிறது. 

இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் பவர்பிளே பகுதியில் மட்டும் 24 விக்கெட்டுகளை இழந்துள்ளது சிஎஸ்கே. ஆனால் இதற்கு நேர்மாறாக சன்ரைசர்ஸ் அணி, 10 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்!

பவர்பிளேயில் சென்னை அணியின் ரன்ரேட் 6.40 மட்டுமே. 8 அணிகளில் இதுதான் மிகவும் குறைவானது. முதலிடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணி, 9.06 ரன்ரேட் வைத்துள்ளது. பவர்பிளே பகுதியில் 5 முறை குறைந்தபட்சம் 3 விக்கெட்டுகளையாவது இழந்துள்ளது சென்னை. 

இதுபோல சென்னை அணி பவர்பிளே பகுதியில் அதிக விக்கெட்டுகளை இழந்து அதிக ரன்களும் குவிக்காமல் இருந்தாலும் இத்தனை வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதற்குக் காரணம், தோனியின் பேட்டிங்கும் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பும் தான். 

பவர்பிளேயில் வீழ்ந்த விக்கெட்டுகள்

சென்னை - 24
கொல்கத்தா - 19
பெங்களூர் - 13
தில்லி - 13
பஞ்சாப் - 12
ராஜஸ்தான் - 12
மும்பை - 10
ஹைதராபாத் - 5

(இவற்றில் சென்னை 12 ஆட்டங்களும் சன்ரைசர்ஸ் 11 ஆட்டங்களும் இதர அணிகள் 11 ஆட்டங்களையும் விளையாடியுள்ளன.) 

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு தரப்பட்டது. கடந்த 2010-க்கு பின் இரண்டாவது முறையாக சென்னை அணி சார்பில் ஆடாமல் உள்ளார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா தற்காலிக கேப்டனாக செயல்பட்டார். அதே போல் டூபிளெஸிஸ், ஜடேஜா ஆகியோரும் ஆடவில்லை. முரளி விஜய், ஷோரே அணியில் சேர்க்கப்பட்டார்கள். முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ், 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களைக் குவித்தது. ஆனால் மோசமான பேட்டிங்கினால், 15 பந்துகள் மீதமிருக்க, 17.4 ஓவர்களிலேயே 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது சென்னை. இந்த வருட ஐபிஎல் போட்டியில், சொந்த மைதானத்தில் தோல்வியே பெறாமல் இருந்த சென்னை தற்போது மும்பையிடம் தோல்வியைத் தழுவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.