‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

7-ஆவது பாஸ் பெருசா! எஸ்எஸ்எல்சி ஃபெயில் பெருசா?

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டம் என்றாலே பரபரப்புக்கு சற்றும் பஞ்சமிருக்காது. 

Published On :31 ஜனவரி 2024, 1:23 pm IST

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டம் என்றாலே பரபரப்புக்கு சற்றும் பஞ்சமிருக்காது. அதிலும் குறிப்பாக சமூக வலைதளங்களில் இரு அணிகளின் ரசிகர்களும் சற்றும் சளைக்காமல் தங்கள் அணிகளின் பெருமைகளை தொடர்ந்து பதிவிடுவதும், அதற்கு எதிர்தரப்பு பதிலடி அளிப்பதுமாக இருக்கும். 

இந்நிலையில், இவ்விரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் அனலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 8-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் ஆடவுள்ளது. 2008-ஆம் தொடக்க சீசன் முதல் தோனி தலைமையில் ஆடி வரும் இந்த அணி 2010, 2011, 2018 ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அது தவிர பிளே ஆஃப் சுற்றுகளுக்கு தற்போது வரை 10 முறை தகுதி பெற்றுள்ளது. மேலும் இறுதி ஆட்டத்துக்கு 8 முறை முன்னேறியுள்ளது.

Story image

இவை மட்டுமல்லாமல் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரையும் 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதிலும் 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் என இரு கோப்பைகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

சூதாட்டப் புகார் எதிரொலியாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டும் கடந்த சீசனில் பங்கேற்று மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று, அசைக்கமுடியாத அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. 

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை இறுதி ஆட்டத்தில் நுழைந்ததில் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதில் 2013, 2015-இல் சென்னைக்கு எதிராக வென்றதும் அடங்கும். மேலும் 2011, 2013-இல் சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் வென்ற சிறப்பை பெற்றது.

ஐபிஎல் போட்டித் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை மோதியதில் 16-11 என்ற வெற்றிக் கணக்குடன் மும்பை இந்தியன்ஸ் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் நாக்-அவுட் சுற்றுகளில் இரு அணிகளும் தலா 4 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளது. ஆனாலும், இறுதிப் போட்டியில் 2-1 என மும்பை இந்தியன்ஸ் மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறது.

Story image

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடர் உட்பட தோனி தலைமையிலான அணியுடன் 5 முறை இறுதிப்போட்டியில் களம்கண்டுள்ளது. அவற்றில் 2010, 2013, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் சிஎஸ்கே அணியுடனும் 2017-ஆம் ஆண்டு ரைஸிங் புணே சூப்பர்ஜெயின்ட் அணியுடனும் மோதியுள்ளது.

8 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 5 முறை மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 13 இறுதிப்போட்டிகளில் களம்கண்டுள்ளது. அவற்றில் இவ்விரு அணிகளும் இணைந்து 6 ஐபிஎல் கோப்பைகளை தன்வசப்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.