மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூப்பர் ஓவர்: 5 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய 'யார்க்கர்' பூம்ரா

​மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 5 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 6:11 pm

DIN


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 5 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டம் சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்தில் 2-வது பேட்டிங் செய்த பஞ்சாப் சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கியது.

பஞ்சாப்புக்கு கேஎல் ராகுலும், நிகோலஸ் பூரனும் களமிறங்கினர். மும்பைக்கு பூம்ரா பந்துவீசினார். முதல் பந்தில் ராகுல் 1 ரன் எடுக்க, 2-வது பந்தில் பூரன் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 3-வது வீரராக தீபக் ஹூடா களமிறங்கினார். 3-வது பந்தில் ராகுல் 1 ரன் எடுக்க, 4-வது பந்தில் ஹூடா 1 ரன் எடுத்தார். ஹூடா 2-வது ரன் எடுக்க முயன்றபோது ராகுல் நிறுத்தினார்.

5-வது பந்தில் 2 ரன் கிடைக்க, கடைசி பந்தில் ராகுல் ஆட்டமிழந்தார். அனைத்து பந்துகளையும் பூம்ரா கச்சிதமாக யார்க்கராக வீசியதால் கடைசி பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் ஆட முயன்று ஆட்டமிழந்தார்.

இதனால், சூப்பர் ஓவரில் பஞ்சாப் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.