மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூப்பர் ஓவரும் 'டை': மீண்டும் சூப்பர் ஓவர்

மும்பை இந்தியன்ல், கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால், மீண்டும் சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 அக்டோபர் 2020, 6:21 pm

DIN


மும்பை இந்தியன்ல், கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால், மீண்டும் சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

மும்பை இந்தியன்ல், கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. ஆட்டத்தில் பஞ்சாப் 2-வது பேட்டிங் செய்ததால் சூப்பர் ஓவரில் முதல் பேட்டிங் செய்தது. பூம்ராவின் சிறப்பான ஓவரால் பஞ்சாப் அணி 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

6 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். ஷமியும் சிறப்பாக 6 பந்துகளை யார்க்கராக வீசியதால் முதல் 3 பந்துகளில் 3 ரன்களும், 4-வது பந்தில் ரன் ஏதும் இல்லை, 5-வது பந்தில் 1 ரன் எடுக்க, கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டன. 2-வது ரன் எடுக்கும்போது டி காக் ரன் அவுட் ஆக சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது.

இதனால், மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.