லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னை சூப்பர் கிங்ஸுக்காக 4,000 ரன்கள்: தோனி புதிய மைல்கல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மட்டும் கேப்டன் மகேந்திர சிங் தோனி 4,000 ரன்களைக் கடந்துள்ளார்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 4:29 pm

DIN


ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மட்டும் கேப்டன் மகேந்திர சிங் தோனி 4,000 ரன்களைக் கடந்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் தோனி 28 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மட்டும் அவர் 4,000 ஐபிஎல் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

2008-இல் தொடங்கிய முதல் ஐபிஎல் சீசனிலிருந்து தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இடையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்குத் தடை விதிக்கப்பட்டதால் 2016 மற்றும் 2017 ஐபிஎல்-இல் புணே அணிக்காகக் களமிறங்கினார் தோனி.

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி 4,596 ரன்களைக் குவித்துள்ளார்.

அதேசமயம், தோனிக்கு இது 200-வது ஐபிஎல் ஆட்டம். ஐபிஎல்-இல் 200-வது ஆட்டத்தில் விளையாடும் முதல் வீரர் தோனி. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.